Skip to main content

Posts

Showing posts from August, 2018
www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
அடங்கி நின்ற வாசி கீழே இறங்கு மானால்     அடுத்தடுத்துப் பயிற்சி செய் ஆனமட்டும் சிந்தை புறஞ்செலா சிவயோகம் இதுவன்றோ     சந்ததமும் செய்துவர சமாதி கூடும் அசையாத பிராணனுடன் அசையும் வாயு     ஐக்கியம் செய்துவிடப் பழக வேண்டும் விட்ட எழுத்துடனே விடாத எழுத்தையிங்கு     கட்ட வேண்டும் உயிர் காக்க வேண்டும்.    (29). ஓமென்ற அட்சரத்தில் ஒளிந்தே நிற்கும்      'உம்' மென்ற நாதமதை 'ஊமை' என்றார் சுழிமுனையின் ஒளியதிலே உணர்வை ஊன்றி      சுகவெளியில் 'உம்' மென்ற நாதம் கேளு நாதத்தில் மனமென்ற ஐந்துதலை நாகம்      நன்றாக இலயமாகும் ஐம்புலன்களோடு போதமது கூடுமப்பா மெளனம் கொஞ்சும்      போக்கறியான் ஞானியல்ல புண்ணாக்காமே                                                                               ...
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு ...
அபூர்வ வாசி ரகசியம் ************************ விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.    இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்....
சிதம்பர சக்கரம் ============== சித்தம் ஆகாசத்தொடு இணையும் போது அதுவே சிதம்பரம். இங்கே கொடுக்கப்பட்ட 'சிதம்பர' சக்கரத்தில் பஞ்சாட்சரம் மந்திரம் உண்டு. வாலையை உணர்ந்தால் அதுவே சச்சிதானந்தம். (சத்+சித்து+ஆனந்தம்) "ஐம்பதொரட்சரந்தான் ஆச்சு, நெஞ்ஜெழுத்தாலே நினையா மலந்த நிசந்தெரியுமொ வாலைப் பெண்ணே. நோக்கிகோல் வாசியை மேலாக வாசி, நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே. சிதம்பர சக்கரம் தானரிந்தார் சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கரமென்றால் அதற்குள் தெய்வத்தை யல்லவோ அறிய வேணும்" இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக, வந்து கொண்டே இருக்கும். அதாவது வாசியோகத்தில் இருக்கும் எவருக்குமே சித்திக்கும் இந்த ஜோதியானது, சஹாஸ்ரத்தில் மேல்நோக்கியே இருக்கும். ‘உன் உடலை வெறும் உப்பிட்ட பாண்டம் என்று மட்டும் எண்ணாதே, அதை பேணவேண்டும்’ என்கிறார்கள் சித்தர்கள். காலங்கிநாதர், போகர், போன்ற சித்தர்கள் எல்லோருமே மேலே சொன்ன இந்த வரிகளை தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர். செப்பு தகட்டில் இந்த சக்கரத்தை செய்து வைத்துள்ளவர்கள், முறையாக அதை ஆராதிக்க வேண்...
* அம்மா வாசி + அமாவாசை * 'பாரடா வாசி என்ற அம்மா வாசி   பார்தனிலே யார்க்கு மிது தெரியாதையா ஆரடா வாசி என்ற அம்மா வாசி  ஆதாரம் ஆறினினும் நடுவே தோன்றி நேரடா சிவ லிங்க ரூப மாகி   நிறைந்த பராபரை தானாவுடையுமாகி ஏரடா இவர்களுட வாசி தோன்றி   இருந்த தடா குல தெய்வ மென்றுதானே'    " 144 அமாவாசைக்கு  ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் செய்வது எப்படி வேதவிதிமுறையோ?    144 அமாவாசை முடிவு வரை மெய்க்குரு நாதர் திருவடி சேவை முடிவுக்கு ஒரு சிஷ்யால் பிரம்மசர்ய விதியை கண்டுனர்ந்து மேல்நிலை வருவார்.    பின் 144 அமாவாசை முடியும் வரை ஓரிடத்தில் அமர்ந்து தவம் மேற்கொண்டு ஞானநிலை கைவரப் பெற்றவரே குரு ஆவார்.    அவரே யோக ஞானத்தை போதிக்க தகுதியானவர்.      மேலும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்து சந்திரன் சூரியனுக்குள் அடங்கி விடுவதால் இந்நாளில் ஜீரண உறுப்புகளுக்கு வேலை கொடுக்காது விரதம் என்ற பெயரில் பட்டினி கிடந்தால் மதியமிர்தம் என்றும் சோமபானம் என்றும் சொல்லும் அமிர்தம் நமக்குள்ளேயே தயாராகும்.      இந்த முற...
உடல் உள்ளமதை தூய்மைப்படுத்தி பிராணனை உட் செலுத்துவதாம் வாசி. உள்ளுணர்வு மெய்யுணர்வாய் மாறுமே வாசி உள் நுழைந்த பின் தீங்கின்றி என்றும் நமைக் காக்குமாம் வாசி எனும் உள்வட்டம். தீய எண்ணங்கள் யாவும் அண்டாவண்ணம் நமைக் காக்குமாம் வாசி. விதிமுறை, பயிற்சி, உணவு முறை மூலம் நம்மை சீர்படுத்தும் வாசி. வாசியை முழுதும் அறிந்து உணர்ந்தோர் எவ்விதத் தீங்கிற்கும் அண்டார். தேனினும் சுவை மிகுந்த வாசியால் உணரப்பட்டோர் பேறு பெற்றோர். எட்டுத் திக்கும் எட்டாத வாசியால் உள்ளம் மாறுமே உண்மையாய். சிவப் பேரொளியை உணர்த்தி மெய்ஞானத்தை அறியச் செய்யும் வாசி. உடல் கழிவு அனைத்தும் அகலுமே வாசியை முழுதாய் உணர்ந்து பயிலயிலே. மூப்பு எளிதாய் உடலில் இருந்து அகலுமே வாசியால். இயற்கையை அறியச் செய்யும் வாசி. இறையை உணரச் செய்யும் வாசி. சீவபக்தியால் முக்தியை அடையலாம் வாசியால். கழிவகன்ற உடலே மெய்யுடல்.
ஆத்ம தரிசனம்!            ( குரு _ சிஷ்யன்) சிஷ்யன் : ஐயனே!  யோகம்  என்பது என்ன? குரு : எதனை  அடைவதற்காகப் பயிற்சி  செய்கிறோமோ, அந்தப் பயிற்சிமுறை  "யோகம்" என்று  அழைக்கப்படும். இன்னொன்று  எதனை  அடைந்தால்,  அனைத்தையும்  அடைந்தது ஆகுமோ, அதனை அடைவதும் _ அதிலேயே நிலைபெறுவதும் அல்லது  அதனுடன்  ஐக்கியமாதலும் "யோகம்"என வழங்கப்படுகிறது.  மேலானவனே! பயிற்சிமுறை யோகமானது  பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், அஷ்டாங்கயோகம் அல்லது வாசி யோகம் எனப் பலவகைகளாகச் சொல்லப்படுகிறது. அவரவர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப  சிலர் பக்தியை, சிலர் ஞானத்தை, சிலர் கர்மத்தை, மற்றும் சிலர் அஷ்டாங்க யோகப்பயிற்சியை  உபதேசிக்கின்றனர்.   எதனையும்  அறிந்து  செய்தால், அவ்வினையால் நலம் விளையும்! எதனை அடைவதற்காகப்  பக்தியோகம்  செய்யப்படுகிறதோ, அதேபலனை அடைவதற்காகத்தான் அஷ்டாங்க யோகமும், அதே பலனுக்காகத்தான் கர்மயோகமும்  அனுஷ்டிக்கப்படுகிறது. மேலானதை அறிவதற்கும், அதனை  அடையச் செய...
வாசி யோகம். *த்ராடகா முதல் பயிற்சி* *************************** மனதை நெறிப்படுத்த சித்தர்கள் ஹட யோகிகள் செய்முறை வகுத்தனர் ஹட யோகிகள் த்ராடக என்ற செய்முறை (தீட்சை) கடை பிடித்தனர். சித்தர்கள் சூரிய யோகம் சந்திர யோகம் அல்லது சூரிய சந்திர யோகம் என்ற செய்முறை வகுத்தனர் . இவற்றை சிருங்கேரி ஜகத் குரு அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் செய்தார். விவேகானந்தர் செய்தார் . இதன் அடிபபடையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது . இதன் தத்துவத்தை பார்ப்போம் . . மனம் என்பது கண்டு , கேட்டு ., உண்டு , உயிர்த்த புலன் களின் தொகுப்பு . மனதை குவிய செய்ய இந்த ஐந்து புலன்களையும் குவியசெய்தால் மனம் குவியும் . மனம் நெறிப்படும். இதற்கான தொழில் நுட்பமே த்ரடகவும், சூரிய சந்திர யோகமும்... ஆரம்ப செய்முறை பயிற்சிகளை சொல்கிறேன் . *த்ராடகா* ******** ஒரு சுவற்றில் உள்ள சுவாமிபடத்தில் சுவாமியின் கண்களை மட்டும் இமை கொட்டாமல் பாருங்கள் . சிறிது நேரத்தில் கண்ணீர் வடியும் . அதன் பின் பழக பழக கண்ணீர் வரத்து நின்றுவேடும் .. சிறிது சிறிதாக நேரத்தை கூட்டுங்கள் . . இரவி...
ஜீவ சமாதி ஆக வேண்டும் என வாசி யோகி தீர்மானித்தால் அதற்கு சில முக்கிய செயல்பாடுகளை தீவிரமாக செய்ய வேண்டும். 1) வாசி யோகா 2) உணவின்றி காற்றை சுவாசித்து வாழும் பயிற்சி, 3) நமது சக்தி உடல்கள், சக்தி மையங்கள் மற்றும் நாடிகளை பற்றிய தெளிவான புரிதல். இவற்றை சரியாக தெரிந்து இருத்தல் மற்றும் முழுமையான பயிற்சி அவசியம். வாசி யோகாவில் ஆரம்ப நிலையில் இருந்து ஊர்த்தவ வாசியில் (18 வகைகள் உள்ளது). நல்ல பயிற்சி பெற்ற பின் ஶ்ரீ கிருஷ்ண வாசியில் முழுமையான நிபுணத்துவம் பெற வேண்டும். இயல்பாக ஶ்ரீ கிருஷ்ண வாசி இயங்க வேண்டும். ஆரம்ப வாசி பயிற்சி மற்றும் ஊர்த்தவ வாசியில் இழுக்கும் உட்சுவாசம் குறைவாகவும், விடும் உட்சுவாசம் நீண்டும் இருக்கும். ஶ்ரீ கிருஷ்ண வாசியில் இழுக்கும் உட்சுவாசம் நீண்டும், விடும் உட்சுவாசம் குறைந்தும் இருக்கும். ஶ்ரீ கிருஷ்ண வாசிக்கும் மற்ற ஊர்த்தவ வாசிக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் உள்ளது. ஊர்த்தவ வாசியானது சக்தி உடல்கள் மற்றும் சக்தி மையங்களின் மேல் அதீத விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஶ்ரீ கிருஷ்ண வாசியானது கேவல கும்பகத்தை இயல்பாக உருவாக்கும். ( அது தான் இறுதியில் ம...
சிவாயநம சிவாயநம #வாசி என்றால் என்ன என்று கூறுங்கள் உங்கள் கருத்துக்களை மட்டும் பகிர வேண்டுகின்றேன் சிவா சிவாயநம நடப்பு நாட்களில் வாசி, வாசி யோகம் என்ற சொல் அதிகமாக உலா வருகிறது... அதில் மயங்காதவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு தற்பொழுது வாசி என்ற சொல் சக்தி வாய்ந்ததாக மாறி விட்டது... உண்மையில் வாசி என்றால் என்ன...? சத்தியமாக மூச்சு பயிற்சி அல்ல... வாசி என்பது "ஒன்றும் இல்லாத தன்மை" உங்கள் உடல் மற்றும் மனம் இயக்கம் இல்லாது இருந்தால் அந்த சிவ தன்மை திரிந்து வாசியாக மாறும்... எப்படி என்றால் *மனிதனின் படி நிலை... 🗻 *மனிதன்* _(பற்றுகள் உள்ள நிலை)_ 🗻 *ஞானி/ யோகி* _(பற்றற்ற நிலை)_ 🗻 *சித்தன் / வாசி* _(மனமற்ற / இருவிணை இல்லா நிலை)_ 🗻 *சிவம்* _(பரம நிலை / முக்தி நிலை)_ ஆக ஒருவரின் எண்ணம் முழுமையான ஒரே வடிவம் கொண்டு அதாவது எண்ணம் இல்லா எண்ணம் (அ) மனம் இல்லா மனம் இருப்பார் என்றால்  சித்தனாவான் அப்பொழுது வாசி தன்மை இயல்பான முறையில் நம்மை இயக்கும் வாசி யின் கட்டுபாட்டில் நாம் இருக்க நாம் சிவ மாக மாறுவோம் உதாரணமாக நாம் கூற வேண்டும் என்றால் பற்று என்பது மி...
⚜🌸 *வாசி யோக பயிற்சி* 🌸⚜       🕉 *வாசியோக சாதனைக்கு முன் மூன்று நிலைகள் உள்ளது* 🔯 அதை முறையாக பயின்றால்தான் வாசியோக சாதனையும் கைகூடும், வாசியும் கைகூடும். ⚜ *ஆசனம்* ⚜ *உணர்வு பயிற்சி* ⚜ *ஆத்மஜோதி தரிசன பயிற்சி* ⚜ *வாசியோக பயிற்சி* ⚜ *நாத பிரம்ம பயிற்சி* ⚜ *சரப்பயிற்சி* ⚜ *நிஷ்டை* ⚜ *சமாதி பயிற்சி* ⚜ *சித்து* ⚜ *ஒளிநிலை* ⚜ *ஒளி உடல்* 🔆சித்தர்கள் அனைவரும் வாசியைப்பற்றியும், வாலையையும், மணோண்  மணியை பற்றியுமே  கூறிச்சென்றுள்ளனர். 🔆அதற்கு முன் உள்ள சாதனையையும், பின் உள்ள பயிற்சியையும் கூறாமல் மறைத்து பாடலாய் பரிபாஷையாய் மறைத்துச்சென்றனர். 🔆பிற்கால சந்ததியினர் பல குருமார்களிடம் வாசி வாசியோகமென்றும் சுவாசப்பயிற்ச்சி என்றும் பிராணயாமம் என்றும் தவறான யோகசாதனையை கற்று முழுமை அடையாமல் தேகம்கெட்டு ஆயுள் குறைந்து கண்பார்வை குறைந்து சீக்கிரம் மரணத்தை அடைகின்றனர். 🔆முறையான வாசியோகம் மரனமில்லா  பெருவாழ்வை தரும். உயர்ந்த ஞானமும், பேரறிவும் , ஒளி நிலையையும் உண்டாக்கும். 🔆இக்கலையை முறையாக எந்த ஆஷ்ரமத்திலும்,எந்த குரு...
*பிராணாயாம சூக்சும ரகசியம்* ******************************* வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் புளிங்கொத்துக் காயும் பழுக்கினும் பிஞ்சாம். இந்த சித்தர் பாடல் பிராணாயாமத்தின் பலனைத் தெளிவாகவும், எளிமையாகவும் சொல்கிறது.  சாதாரணமாக மூச்சை இழுத்து, உடனே வெளியே விடுகிறோம். இவ்வாறு மூச்சு விடுவதிலேயே நமக்கு இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்றால், உள்ளே இன்னும் சிறிது நேரம் வைத்திருந்தால் காற்றிலுள்ள பிராணசக்தி முழுவதும் நுரையீரலில் உள்ள காற்றறைகளால் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குக் கிடைத்தால் எவ்வளவு சக்தி கிடைக்கும். சாதாரணமாக நாம் மூச்சுவிடும் போது 79% நைட்ரஜன் வாயு உள்ளே சென்று அப்படியே திரும்பிவிடுகிறது. பிராணவாயுவோ 20% உள்ளே போய் 16% வெளியே வருகிறது. கரிமில வாயு 0.04 உள்ளே போய் 4.04% வெளியே வருகிறது. இந்தக் கணக்கை உற்று கவனித்தீர்கள் என்றால் ஒரு சூக்கும இரகசியம் விளங்கும். அதாவது சுவாசிக்கும் போது நம் நுரையீரல் ஈர்த்துக் கொண்டது 4% பிராணவாயுவை. எந்த அளவு பிராணவாயுவை ஈர்த்துக் கொண்டதோ அந்த அளவு கரிமிலவாயு வெளியேறுகிறது. அதிக அளவு பிராணவாயுவை நாம் கும்பகம் செய்வதால் ஈர்த்துக் கொள்கிற ந...
மூலாதாரம் பற்றி சித்தர் போகர் ----------------------------------------------------- ஆறு ஆதாரங்களில் ஒன்றான மூலாதாரம் , முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது. அதன் அமைப்பை போகர் சித்தர் தனது போகர் 7000 என்ற நூலில் இப்படி கூறுகிறார். போகர் 7000காணவே மூலம் அஃது அண்டம் போலக் காரணமாய்த் திரிகோண மாக நிற்கும் பூணவே மூன்றின்மேல் வளைய மாகும் புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும் நாணவே நாற்கமலத்து அட்சரங்கள் நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும் மூணவே மூக்கோணத்து உள்ஒளி ஓங்கார முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே – போகர் 7000 மூலாதாரமானது ஒரு வட்டம் போல் இருக்குமாம் அதன் நடுவில் முக்கோணம் ஒன்று இருக்குமாம் அதன் மேலே ஒரு வளையமும், அதனை சுற்றிலும் நான்கு இதழ்களும் இருக்குமாம். அந்த இதழ்களில் வ-ச-ஷ-ஸ என்ற நான்கு எழுத்துக்கள் இருக்குமாம். அதன் ஒரு புறத்தில் ‘உ’ காரமும் மறுபுறத்தில் ‘அ’ காரமும் இருக்குமாம். அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பர் அதிலே ஓர் கோணத்தில் உகாரம் நிற்கும் உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள் ஒடுங்கியதோர் முனை ஒன்றில் கதவிப் பூவாய்ப் புகாரமாய் முகங்கீழ்க்குண் டலியாம் சக்தி பெண்பாம்பு போ...
ஓம் நமசிவாய ஓம் ஆத்மகுருவே சரணம்: *தீட்சை* என்றால் என்ன ? தீட்சை என்பது சிவாகமங்களில் கூறப்பட்ட சைவக்கிரியைகளில் ஒன்று.....சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிப்படுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும்....சைவ சமயிகள் சமயப் பிரவேசம் செய்வதற்கான வழங்கப்பட்ட கிரியை இதுவாகும் புராணங்களைப் படிப்பதற்கும்...மந்திரங்களை ஓதுவதற்கும்...ஞான சாஸ்திரங்களை கேட்பதறகும்.....படிப்பதற்கும்...பிரதிஷ்டை விவாகம் போன்ற நற் சமயக் கிரியைகளை செய்வதற்கும் தகுதியுடையவர்கள்   தீட்சை பெற்றவர்களே `தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை. மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும். நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை  உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர். முத்திரைகளையும், யந்திரங்களையும்...
காயத்ரி மஹா மந்திரங்கள் மற்றும் சித்தர் ஸ்தோத்திரம் காயத்ரி மஹா மந்திரம் மந்திரங்களுட் தாயென காயத்ரி மகா மந்திரத்தை பெரியோர்கள் போற்றுகின்றனர்.     அவர்கள் கடவுளை இப்பிரபஞ்ச நாயகனை பேரொளியாகவும் துதிப்பார்கள்.  பேரண்டங்களில் உருவமற்றது என்று ஒன்றுமில்லை. விஞ்ஞானம் இந்த கூற்றை ஒப்புக்கொள்கிறது . மெய்ஞானமோ உருவத்தை உருவம் என்றும்,  அருவம் என்றும் கூறுவதோடு இறைவனையும் உரு என்றும், அரு என்றும் , அரு உரு என்றும் ஒரு படி மேலாக சென்று 3 நிலைகளில் காண்கிறார்கள். எனவே இறைவனுக்கும் உரு (உருவம் ) இருக்க வேண்டும். அந்த உருவின் பரிமாணங்கள்  எத்தகையது  என்பது மட்டும் சாமான்யர்களால் கூறவோ, அறிந்திடவோ , புரிந்து கொள்ள இயலாது என்றும் மெய்ஞான வழக்கில் உள்ளதாகும் . இதன் உண்மை என்னவென்றால் கண்ணால் காண்கின்ற  அல்லது காண முடியாத  பெரிய பொருட்கள் முதல் சிறிய பொருட்கள் வரை மிகச்சிறிய அணுச் சேர்மானமே அவற்றின் அடிப்படை . உரு உள்ளதை அகமாவோ, புறமாகவோ காண முடியாத போது , நினைவில் எண்ண விருத்தியால்  காண்கின்ற போது தான் அது அருவாகி விடுகிறது . மற்றும் பு...
*பிராணாயாம சூக்சும ரகசியம்* ******************************** வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் புளிங்கொத்துக் காயும் பழுக்கினும் பிஞ்சாம். இந்த சித்தர் பாடல் பிராணாயாமத்தின் பலனைத் தெளிவாகவும், எளிமையாகவும் சொல்கிறது.  சாதாரணமாக மூச்சை இழுத்து, உடனே வெளியே விடுகிறோம். இவ்வாறு மூச்சு விடுவதிலேயே நமக்கு இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்றால், உள்ளே இன்னும் சிறிது நேரம் வைத்திருந்தால் காற்றிலுள்ள பிராணசக்தி முழுவதும் நுரையீரலில் உள்ள காற்றறைகளால் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குக் கிடைத்தால் எவ்வளவு சக்தி கிடைக்கும். சாதாரணமாக நாம் மூச்சுவிடும் போது 79% நைட்ரஜன் வாயு உள்ளே சென்று அப்படியே திரும்பிவிடுகிறது. பிராணவாயுவோ 20% உள்ளே போய் 16% வெளியே வருகிறது. கரிமில வாயு 0.04 உள்ளே போய் 4.04% வெளியே வருகிறது. இந்தக் கணக்கை உற்று கவனித்தீர்கள் என்றால் ஒரு சூக்கும இரகசியம் விளங்கும். அதாவது சுவாசிக்கும் போது நம் நுரையீரல் ஈர்த்துக் கொண்டது 4% பிராணவாயுவை. எந்த அளவு பிராணவாயுவை ஈர்த்துக் கொண்டதோ அந்த அளவு கரிமிலவாயு வெளியேறுகிறது. அதிக அளவு பிராணவாயுவை நாம் கும்பகம் செய்வதால் ஈர்த்துக் கொள்கிற ...
தச வாயுக்களும் அதன் பணிகளும்: கண்ணால் காண முடியாத (உயிர், பிராணன், ஜீவன்) எனும் உயிர்க்காற்று நிலவி, நிரவிடும் ( தச வாயுக்களில் ஒன்றான பிராதனமான பிராண வாயு ஆகும்.) பிறந்த உடன் துவக்கிய சுவாசம் இறுதி மூச்சு எனப்படும் மரணம் வரை அவனை வாழ வைக்கிறது. பிராண வாயுக்களோடு (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) என்று பெயர்ப்பும் பிரதான ஐந்து வாயுக்களுடன் இதர உப வாயுக்களான (நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் ) என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்களும் இணைந்திருப்பினும் செயல்படாமல் இருந்தன எனக்கூறலாம். கருவீட்டினின்றும் பெருவீடு என்ற இந்த பிரபஞ்சத்தின் பிடிக்கு வந்த பிறகே இந்த பத்து வாயுக்களும் தத்தம் பணியினைத் துவங்கியது என்பதோடு உடலின் பல்வேறு பகுதிகளில் பிராணனோடு இணைந்தும், தனித்தும் பிராணனின் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. தச வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன் ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது. இப்பணிக்கு வாசி என்ற சுவாசத்தை ப...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...