Skip to main content
*சித்தர்களும் சிவபெருமானும்...!!*

கேள்வி 1 ;

*சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?*
அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...?

யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள்.

அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்….

குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.

கேள்வி 2 ;

*சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?*

ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்…..

சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும்.
அதாவது மனம்+ஆதி.
ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள்.

ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாகதான் பிறக்கிறோம்.

ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம்,

ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.

ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம்.

இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.

ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை.

மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி என்ற கேள்வி வரலாம்……

விடை காயகல்ப்பம். காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு.

மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள்.

உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும்.

இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.

பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள்.

அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும்

கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகலானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும் ………

பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.

மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும்.

எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது.

தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்…...!!!
#நல்லதே_நடக்கும்

Comments

Popular posts from this blog

லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...

Karma Sastra

KARMA कर्म கர்மா சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே ! ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே ! ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே -------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē! Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē! Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē -------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Sanchita is the residual balance karma that follows ! Prarapta is that which is now experienced in this life ! Akami is balance accumulated in this life carried over When the balance of all 3 is nil, then there is no rebirth  ------------------------------------------------------------- What is Prarabdha Karma? A collection of past actions, which are ready to be experienced through t...
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு ...