Skip to main content
காயத்ரி மஹா மந்திரங்கள் மற்றும் சித்தர் ஸ்தோத்திரம்

காயத்ரி மஹா மந்திரம்

மந்திரங்களுட் தாயென காயத்ரி மகா மந்திரத்தை பெரியோர்கள் போற்றுகின்றனர்.     அவர்கள் கடவுளை இப்பிரபஞ்ச நாயகனை பேரொளியாகவும் துதிப்பார்கள்.  பேரண்டங்களில் உருவமற்றது என்று ஒன்றுமில்லை. விஞ்ஞானம் இந்த கூற்றை ஒப்புக்கொள்கிறது .

மெய்ஞானமோ உருவத்தை உருவம் என்றும்,  அருவம் என்றும் கூறுவதோடு இறைவனையும் உரு என்றும், அரு என்றும் , அரு உரு என்றும் ஒரு படி மேலாக சென்று 3 நிலைகளில் காண்கிறார்கள். எனவே இறைவனுக்கும் உரு (உருவம் ) இருக்க வேண்டும்.

அந்த உருவின் பரிமாணங்கள்  எத்தகையது  என்பது மட்டும் சாமான்யர்களால் கூறவோ, அறிந்திடவோ , புரிந்து கொள்ள இயலாது என்றும் மெய்ஞான வழக்கில் உள்ளதாகும் .

இதன் உண்மை என்னவென்றால் கண்ணால் காண்கின்ற  அல்லது காண முடியாத  பெரிய பொருட்கள் முதல் சிறிய பொருட்கள் வரை மிகச்சிறிய அணுச் சேர்மானமே அவற்றின் அடிப்படை .

உரு உள்ளதை அகமாவோ, புறமாகவோ காண முடியாத போது , நினைவில் எண்ண விருத்தியால்  காண்கின்ற போது தான் அது அருவாகி விடுகிறது . மற்றும் புறமாக பார்க்கக் கூடிய எதையும் ஒளியின் உதவியின்றிப் பார்க்க முடியாதல்லவா?  ‘
இருளில்  நமது கண்கள் எதையும் புலப்படுத்துவதில்லை  என்பதும் உண்மையல்லவா ?
கட்புலன் காணும் திறமை பெற்றிருப்பினும் ஒளியின் உதவியின்றி அதனைக் காண முடியாது என்பதும்  உண்மையல்லவா ?

எனவே  ஒளி என்பது இல்லாதவரை அகப்பொருள்,புறப்பொருள் இரண்டும் அற்றதாகி விடுகிறது.

அறிவினை, ஞானத்தை ஒளிஎன்றே கூறுவதோடு  அந்த ஒளிக்கு அவ்வொளிக்கு வணக்கம் செய்வதை தொன்று தொட்டு,   இன்றளவில் இருக்கும் பண்பாகும்

இறைவனையும், இறை அருளையும் ஒளி வடிவாகவே வணங்குவது ஞானியர்களின் பண்பு .

காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திர மகரிஷியால் உருவாக்கப்பட்டது என்பதோடு மேலான அறிவினை விளக்கி இந்த பிரபஞ்ச நாயகனை அறிவதற்கு துணை செய்யும் மொழியினை போற்றுவது அடிப்படை பொருளாகும்.

அதன் அடிப்படையில் கடவுளரையும் , சித்தர்களையும், பலப்பல ரிஷிகளையும் , தேவர்களையும் , அவரவர் பெயர்த் தொகுதியோடு  காயத்ரி மந்திரத்தின் பகுதி, விகுதியினையும் சேர்த்துத் துதிப்பது சிறந்த வழிபாடாகும்.

அந்த முறையில் மஹா புருஷர்களால் (ஞானியர்களால் ) உருவாக்கி  உச்சரித்து  வணங்கிய பல்வேறு காயத்ரி மந்திரம் அநேகம் உண்டு.
அவற்றில் எங்களுக்கு கிடைத்தவற்றை நம்முடைய மகரிஷி பதஞ்சலி வலைத்தளத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்சசியுறுவதோடு
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி  மகரிஷி அனுமதித்து ஆசியும் அளிப்பார் என்பதோடு மெய்யன்பர்களில்  பலரும்  இதைப் படித்து பயனுற வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறோம்.

அத்ரி மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மகா யோகாய  தீமஹி

தந்நோ  அத்ரி  ப்ரசோதயாத்

அகோர மஹரிஷி காயத்ரி  மந்திரம்

ஓம் தத்புருஷாய  வித்மஹே

அகோர ரூபாய தீமஹி

தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்

ஆங்கீரஸ  மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே

ப்ரம்ம புத்ராய  தீமஹி

தந்நோ ஆங்கீரஸ ப்ரசோதயாத்

கண நாதர் முனிவர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

கண நாதாய தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

கதம்ப மகரிஷி  ஸ்தோத்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

தர்ம சீலாய தீமஹி

தந்நோ கதம்ப ப்ரசோதயாத்

கன்வ மகரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தர்ம ராஜாய வித்மஹே

சிவ ப்ரியாய தீமஹி

தந்நோ கன்வ ப்ரசோதயாத்

காகபுஜண்ட மஹரிஷி  காயத்ரி மந்திரம்

ஓம் வாசி ராஜாய வித்மஹே

விஸ்வ வல்லபாய  தீமஹி

தந்நோ  துண்ட ப்ரசோதயாத்

ஓம் புஜண்ட தேவாய வித்மஹே

தியான சித்திதாய தீமஹி

தந்நோ பகவத் ப்ரசோதயாத்

பரத மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
நாட்ய வல்லபாய தீமஹி

தந்நோ பரத ப்ரசோதயாத்

பரத்வாஜ மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் பரத்வாஜாய வித்மஹே

வியாஸ சிஷ்யாய தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

 போதாயன   மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் போதாயன   வித்மஹே

ஸுத்ரதாராய  தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

பிருங்கி மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் த்ரைபதாய வித்மஹே

பிரம்ம புத்ராய தீமஹி

தந்நோ ப்ருங்கி ப்ரசோதயாத்

மாண்டூக மகரிஷி மகரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய   வித்மஹே
நித்ய த்யானாய தீமஹி
தந்நோ மாண்டூக ப்ரசோதயாத்

மத்வ மகரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்ஜனாய   வித்மஹே

அத்வைதாய தீமஹி

தந்நோ மத்வ ப்ரசோதயாத்

மார்க்கண்டேய மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் மார்க்கண்டாய வித்மஹே

சிரஞ்சீவாய தீமஹி

தந்நோ ம்ருத்யு ப்ரசோதயாத்

உரோம மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

தீர்க்க தேகாய தீமஹி

தந்நோ ரோம ப்ரசோதயாத்

வியாச மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் வேதாதத்மஹா வித்மஹே

விஷ்ணு ப்ரியாய  தீமஹி

தந்நோ  வியாச ப்ரசோதயாத்

கௌசிக மகரிஷி  ஸ்தோத்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

காயத்ரி வாசாய  தீமஹி

தந்நோ கௌசிக ப்ரசோதயாத்

சுகப் பிரம்ம மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் வேதத்மஹாய வித்மஹே

வியாச புத்ராய தீமஹி

தந்நோ சுகர் ப்ரசோதயாத்

நாரதர் மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் கான வல்லபாய வித்மஹே

பிரம்ம புத்ராய  தீமஹி

தந்நோ நாரத ப்ரசோதயாத்

வால்மீகீ  மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் வான்மீகீஸ்ய  வித்மஹே

ராம காவ்யாஸ  தீமஹி

தந்நோ  யோகி ப்ரசோதயாத்

வசிஷ்ட மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

ப்ரம்ம புத்ராய தீமஹி

தந்நோ வசிஷ்ட ப்ரசோதயாத்

நாரதர் மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் கான வல்லபாய வித்மஹே
பிரம்ம புத்ராய  தீமஹி

தந்நோ  நாரத ப்ரசோதயாத்
மார்க்கண்டேய மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் மார்க்கண்டாய வித்மஹே

சிரஞ்சீவாய தீமஹி

தந்நோ ம்ருத்யு ப்ரசோதயாத்

கபிலர் மகரிஷி  ஸ்தோத்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ கபில ப்ரசோதயாத்

கலை கொட்டு முனிவர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

ரிஷ்ய ஸ்ருங்காய  தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

கைலாய சட்டை கம்பளி முனிவர் காயத்ரி மந்திரம்

ஓம் சட்டநாதாய வித்மஹே

கயிலை சஞ்சாராய தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

Comments

  1. TITanium Arts: The Tinted Glasses and Gatherings
    The Tinted titanium nose stud Glasses and Gatherings guy tang titanium toner is the thinkpad x1 titanium only titanium septum jewelry craftsmanship app for Tinted titanium quartz meaning Glasses and Gatherings.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...

Karma Sastra

KARMA कर्म கர்மா சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே ! ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே ! ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே -------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē! Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē! Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē -------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Sanchita is the residual balance karma that follows ! Prarapta is that which is now experienced in this life ! Akami is balance accumulated in this life carried over When the balance of all 3 is nil, then there is no rebirth  ------------------------------------------------------------- What is Prarabdha Karma? A collection of past actions, which are ready to be experienced through t...
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு ...