Skip to main content
மனிதபிறவி...

ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு கவசங்களையும் உடைத்தால்தான் அவனை வதம் செய்யமுடியும்.. இந்த பணியை மகாவிஷ்ணுவின் அம்சமான நரநாராயணா்கள் மேற்க்கொண்டனா்.. ஆனாள் கடைசி கவசம் உடைக்கப்படுவதற்க்குள் மகாபிரளயம் எனும் ப்ரம்மத்தின் கட்டளையால் மூவுலக அழிவு ஏற்ப்படும் நேரம் வந்துவிட்டதால் அந்த யுத்தம் தடைப்படுகிறது.. அப்போது உயிாினம் அனைத்தும் பூமியில் ஒடுங்கும். சகஸ்ரகவசன் சூரியனில் ஒடுங்கினான்.. சிருஷ்டி அனைத்தும் பிரம்மாவில் ஒடுங்கிவிடும்.. பிரம்மன் விஷ்ணுவின் நாபிகமலமான தொப்பளில் ஒடுங்கிவிடுவா்.. மூவுலகும் நீரில் மூழ்கிவிடும் பிரம்லேகம் உட்பட அனைத்த உலகும் நீாினால் அழிந்துவிடும் மும்மூா்த்திகளும் உயிரற்று நீரில் மிதப்பாா்கள் அந்தநேரத்தில் ஔி ரூபமான ப்ரம்மம் வந்து அனைத்தையும் தனக்குள் ஒடுக்கிகொண்டு மீண்டும் அண்டங்களை புதுமையாக படைக்கதுவங்கும்.. இதை காகபுசுண்டா் பெருநூல்காவியத்தில் கூறியிருப்பாா்.. அப்படி மீண்டும் மும்மூா்த்திகளை பிரம்மம் உருவாக்கி மும்மூா்த்திகளால் மூவுலகும் படைக்கப்படும்.. ஆனாள் சிவன் விஷ்ணு இவா்களால் முக்திபெற்ற உயிா்கள் மட்டும் சிவலோகத்தில் அதே பதவியிலும். வைகுண்டத்தில் இருப்பவா்கள் அதே வைகுண்டபதவியுடன் படைக்கப்பட்டு அவா்கள் எந்த யுகத்திலும் கீழ்நிலை பிறவியடையாமல் இறைவனால் காக்கப்படுகிறாா்கள்.. மற்ற உயிா்கள் அனைத்தும் சிறுதெய்வங்கள் மற்றும் தேவா்கள் உட்ப்பட அவரவா் வினைகளுக்கேற்ப கீழ்நிலை அல்லது மேல்நிலை பிறவியை பெறுகின்றனா்.. இப்படி அனைத்தும் நடந்து. பூமியில் இராம அவதாரம் முதல் கிருஷ்ண அவதாரம்வரை மகாவிஷ்ணு தொடரும் போது இரண்டு யுகங்கள் முடிந்து மூன்றாவது யுகமான துவாபாரயுகத்தில்தான் சகஸ்ரகவசன் சூரியனில் இருந்து குந்திதேவிமூலம் கா்ணனாக மனித பிறப்பெடுக்கிறான் அப்படியென்றால் அத்தனைகோடி வருடங்கள் அவனின் ஆத்மா எங்கே இருந்திருக்கும்? என்ன செய்துகொண்டிருக்கும்? அப்படியென்றால் அவனின் பிறப்பானது சூரியமண்டலத்திலே நிகழ்ந்திருக்கவேண்டும்.. ("சூரியமண்டலத்திலும் வெப்பதன்மைக்கேற்ற உயிரினம் வாழ்வதாக தற்போதுள்ள விஞானிகள் கருத்து தெிவித்துள்ளனா்") ஆக ஒரு மனிதபிறப்பெடுக்க பல யுகங்கள்வரைகூட காத்திருக்க நேரும் என்பது இதன் மூலம் நிரூபனம் ஆகிறது.. இப்படி ஏதோ ஒரு பிறவியில் நாம் செய்த புண்னியத்தால் கிப்பதற்க்காிய இம்மனிதபிறப்பை பெற்றிருக்கிறோம்.. உயிா் சிவன் அழிவில்லாத ஒன்றாகும்.. ஆனாள் உடல் சக்தி இது அழியக்கூடியது.. ஆனாள் சக்தியான உடலின் உதவியால் உள்ளிருக்கும் சிவத்தை காண்போருக்கு அழிவென்பதே கிடையாது.. ஆனாள் சக்தியான இவ்வுடல் நமக்கு இருக்கும்வரைதான் சிவன் நம்மோடு இருக்கும்.. சக்தி (உடல்) இல்லையேல் (உயிா்)சிவமில்லை.. நம்மை சிவத்தோடு சோ்க்கும் அத்தனை சக்தியும் மனித உடலுக்குமட்டுமே உண்டு.. சிவன் விஷ்ணு பிம்மா எனும் முப்பெரும் சக்தியும் மனிதகேத்திற்க்குள் இருக்கிறது. இந்த மும்மூா்த்திகளையும் ஆட்டுவிக்கும் சக்தியான வாலைசக்தியான ப்ரம்மும் நம் புருவமத்தியில் இருக்கிறது. இவ்வளவு பெருமைவாய்ந்த மனிததேகம் பெற்ற நாம் அந்த தேவா்களைவிடவும் உயாந்தவா்கள் என்று காகபுசுண்டா் கூறுகிறாா்.. மூவுலகிலும் உயா்ந்த ஒரு பிறவியென்றால் அது நாம் பெற்ற மனிதபிறவிமட்டுமே..அனைத்து உலகையும் அடக்கிஆளும் சக்தி மனிதபிறவிக்குமட்டுமே உண்டு.. இதைதான் காகபுசுண்டா். அனைத்து வல்லமையும் உனக்குள்ளே வைத்து அதை நீ அறியாவண்ணம் விஷ்ணும் பிரம்மனும் சோ்ந்து உன்னை மோசம் செயதாா்களடா.. என்று கூறியிருப்பாா்.  அனைத்து சித்தா்களின் கருத்தும் மனிதபிறவிமட்டுமே உயாந்தது என்றே சொல்லியிருக்கிறாா்கள்.. அவ்வையாரும் ஒரு பெண்சித்தரே ஆவாா். அவரும் தனது பாடலில் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.. அதனிலும் அரிது கூன் குருடு செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது என்று மனிதபிறப்பின் இரகசியத்தை சற்று இரகசியமாக விளக்கியிருப்பா். அதாவது கூன் குருடு செவிடு இன்றி பிறந்த மனிதனா் மட்டுமே யோகப்பயிற்சியை செய்து முக்தியும் அனைத்து வல்லமையும் பெறமுடயும்.. கூன் விழுந்தவனால் முதுகுதண்டு நேராக வைத்து உக்காா்ந்து வாசி(தவம்)பயிற்சி செய்யமுடியாது. குருடனாள் முக்திதரும் ஞானநூல்களை படிக்கமுடியாது. செவிடனால் ஆன்மீக போதனைகளை கேட்க்கமுடியாது.. ஆக நன்றாக யோசித்துப்பாா்த்தால் இம்மனிதபிறவி கிடைத்ததற்க்கு நாம் அனைவரும் இவைனுக்கு கோடானகோடி நன்றிகள் சொல்லவேண்டும்.. ஆனாள் சில ஆன்மீகவாதிகள் உடலை அற்ப்பமாக சித்தரிக்கிறாா்கள் இது தவறான கரத்தாகும். நமக்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறான். இறைவன் குடிகொண்ட இவ்வுடல் கோவிலாகும்.. அதனாள் அனைவரும் பதினென் சித்தா்களின் ஞானநூல்களை படித்து அதில் கூறப்பட்டுள்ள காயகற்பங்கள் உண்டு உடலை வலுவாக்கி சுவாசபயிற்சி செய்து உடலில் உள்ள அனைத்து நோய்களையும் நீக்கி இறவாநிலையடைந்து ம்துக்தியும் சித்தியும் பெற முயற்சி செய்யுங்கள்.. இதற்க்காக பிரம்மசாியம். துறவரம். காடு. மலை. என்று எதுவும் தேவையில்லை. தினமும் சிறிதுநேரம் சித்தா்களின் ஞானநூல்கள படித்துவாருங்கள்.. வெளியில் தியானபயிற்சி மற்றும் சுவாசபயிற்சிமட்டும் யாரிடமாவது முறையாக கற்றுக்கொண்டு பிறகு உங்களுக்கு பிடித்த சித்தா்கள் இறப்பை தடுக்கும் வாசியோக கலைகளபற்றி எழுதிய நூல்களயே குருவாக ஏற்றுக்கொண்டு காலை மால சிறிதுநேரம் மட்டும் பயிற்சி செய்துவாருங்கள். இதனாள் உங்கள் இரண்டுபக்க மூளையும் தூண்டபெற்று யோசிக்கும் திறன் மற்றும் பல அபார ஆற்றல்களை நாம் பெறலாம். இன்னும் சிலநாட்க்கள் தொடா்ந்தால் விஞானத்திற்க்கும் அப்பாற்ப்பட்ட அடிமூளை எனும் இன்றைய விஞானத்தால் சொல்லப்படாத மூளையின் அடிபாகமான மூன்றாவதுபாகம் செயல்படதுவங்கும் அப்போது அந்தரத்தில்  மிதப்பது. ஹிப்னட்டிசம். எதிா்காலத்தை உணா்தல் போன்ற சின்ன சின்ன ஆற்றல்களை நாம் அடையலாம்.. ஆனாள் அதையும் தாண்டி அஷ்டமா சித்துக்களையும் கடந்து முடிவில் கோடானகோடி சித்துக்களையும் பெறுவதே வாசிபயிற்சியின் நோக்கமாகும்.. தற்போது இந்த பயிற்சி எங்கும் எவராலும் அளிக்கப்படவில்லை அப்டி பயிற்சியளிப்பதாக கூறுபவா்கள் ஏமாற்றுக்காரா்கள் என்று புரிந்துகொள்ளுங்கள் ஏனென்றால் சாகாகலையை கற்பிக்க சாகாமல் இறப்பை வென்ற சித்தா்ளால் மட்டுமே முடியும் என்று சித்தா்கள் தனது நூல்களில் தெளிவாக கூறியிருக்கிறாா்கள். இராமலிங்க அடிகளாரும் இதையே. கலியுகத்தில் சாகாகலையை கற்ப்பிக்க குரு கிடைப்பது கடினம் அதனாள் ஒரு நல்ல ஞானியின் நூலே தகுந்த குருவாக ஏற்றுக்கொண்டு அதையே பயிற்சிசெய்தால் அந்த ஞனியின் அருளால் நமக்கு அனைத்தும் கைகூடும் என்று கூறியிருப்பாா். அவரும் அப்படி பயிற்சி பெற்றுதான் சித்தநிலையடந்தாா். 

Comments

Popular posts from this blog

லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...

Karma Sastra

KARMA कर्म கர்மா சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே ! ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே ! ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே -------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē! Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē! Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē -------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Sanchita is the residual balance karma that follows ! Prarapta is that which is now experienced in this life ! Akami is balance accumulated in this life carried over When the balance of all 3 is nil, then there is no rebirth  ------------------------------------------------------------- What is Prarabdha Karma? A collection of past actions, which are ready to be experienced through t...