Skip to main content
சிவாயநம

சிவாயநம
#வாசி என்றால் என்ன என்று கூறுங்கள் உங்கள் கருத்துக்களை மட்டும் பகிர வேண்டுகின்றேன் சிவா
சிவாயநம

நடப்பு நாட்களில் வாசி, வாசி யோகம் என்ற சொல் அதிகமாக உலா வருகிறது... அதில் மயங்காதவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு தற்பொழுது வாசி என்ற சொல் சக்தி வாய்ந்ததாக மாறி விட்டது...

உண்மையில் வாசி என்றால் என்ன...?

சத்தியமாக மூச்சு பயிற்சி அல்ல...

வாசி என்பது "ஒன்றும் இல்லாத தன்மை"

உங்கள் உடல் மற்றும் மனம் இயக்கம் இல்லாது இருந்தால் அந்த சிவ தன்மை திரிந்து வாசியாக மாறும்... எப்படி என்றால் *மனிதனின் படி நிலை...

🗻 *மனிதன்* _(பற்றுகள் உள்ள நிலை)_
🗻 *ஞானி/ யோகி* _(பற்றற்ற நிலை)_
🗻 *சித்தன் / வாசி* _(மனமற்ற / இருவிணை இல்லா நிலை)_
🗻 *சிவம்* _(பரம நிலை / முக்தி நிலை)_

ஆக ஒருவரின் எண்ணம் முழுமையான ஒரே வடிவம் கொண்டு அதாவது எண்ணம் இல்லா எண்ணம் (அ) மனம் இல்லா மனம் இருப்பார் என்றால்  சித்தனாவான் அப்பொழுது வாசி தன்மை இயல்பான முறையில் நம்மை இயக்கும் வாசி யின் கட்டுபாட்டில் நாம் இருக்க நாம் சிவ மாக மாறுவோம்

உதாரணமாக நாம் கூற வேண்டும் என்றால் பற்று என்பது மின்சாரமாக கொள்ள வேண்டும், மின்சாரம் இருந்தால் பல எண்ணம் என்னும் மின் சாதனங்கள் இயங்கும், மின்சாரம் இல்லை என்றால் எதுவும் இயக்காது அப்பொழுது வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது மற்ற சாதனங்கள் அமைதியாய் இருப்பதை நாம் காண இயலும், இங்கே தீபம் என்பது வாசி யால் தன்னை உணர்வது பின் சிவ மாகுதல்

இதுவே #வாசி

மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.