Skip to main content


ஜீவ சமாதி ஆக வேண்டும் என வாசி யோகி தீர்மானித்தால் அதற்கு சில முக்கிய செயல்பாடுகளை தீவிரமாக செய்ய வேண்டும்.

1) வாசி யோகா
2) உணவின்றி காற்றை சுவாசித்து வாழும் பயிற்சி,
3) நமது சக்தி உடல்கள், சக்தி மையங்கள் மற்றும் நாடிகளை பற்றிய தெளிவான புரிதல்.

இவற்றை சரியாக தெரிந்து இருத்தல் மற்றும் முழுமையான பயிற்சி அவசியம்.

வாசி யோகாவில் ஆரம்ப நிலையில் இருந்து ஊர்த்தவ வாசியில் (18 வகைகள் உள்ளது).

நல்ல பயிற்சி பெற்ற பின் ஶ்ரீ கிருஷ்ண வாசியில் முழுமையான நிபுணத்துவம் பெற வேண்டும். இயல்பாக ஶ்ரீ கிருஷ்ண வாசி இயங்க வேண்டும்.

ஆரம்ப வாசி பயிற்சி மற்றும் ஊர்த்தவ வாசியில் இழுக்கும் உட்சுவாசம் குறைவாகவும், விடும் உட்சுவாசம் நீண்டும் இருக்கும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசியில் இழுக்கும் உட்சுவாசம் நீண்டும், விடும் உட்சுவாசம் குறைந்தும் இருக்கும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசிக்கும் மற்ற ஊர்த்தவ வாசிக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் உள்ளது. ஊர்த்தவ வாசியானது சக்தி உடல்கள் மற்றும் சக்தி மையங்களின் மேல் அதீத விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசியானது கேவல கும்பகத்தை இயல்பாக உருவாக்கும். ( அது தான் இறுதியில் மிக அவசியமானது) 

ஊர்த்தவ வாசியை குறைந்த பட்சம் 15 லட்ச உட்சுவாசத்தை செய்தால், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் மாபெரும் தாக்கத்தை உருவாக்கிவிடும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசியானது உண்ணாக்கிற்கும், பீனியல் சுரப்பிக்கும் நடுவே இயங்க கூடியது. கேவல கும்பகத்தை இயல்பாக உருவாக்க கூடியது.

நுரையீரல் மற்றும் மூக்கை பயன்படுத்தாமல் உண்ணாக்கு மற்றும் பீனியலுக்கு இடையே சுவாசித்து வரும் போது, உடலில் உள்ள ரோம துளைகள் காற்று,பூமி மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்சக்தியை சுவாசிக்க ஆரம்பிக்கும். ( சவ்வூடு பரவுதல் எனும் முறையை போலவே)

இந்த நிலையில் மூக்கு மற்றும் நுரையீரல் தேவைகள் இல்லாமல் ஆகிவிடும்.  இடா மற்றும் பிங்கல நாடிகளின் இயக்கம் முழுமையாக நின்று போய், சுழுமுனை நாடியின் இயக்கம் முழுமையாக இயங்க தொடங்கும். இந்த நிலை தொடர்ந்து நிகழும் போது, உண்ணாக்கு மற்றும் பீனியல் சுரப்பிக்கு நடுவே இயங்கும் உட்சுவாசமானது, கேவல கும்பகமாகி நின்று விடும். மிக இயல்பாக, எந்த வித சிரமமும் இல்லாது சுவாசம் அதற்கு அடங்கி நிற்கும்.

ஆனால் வாசி யோகியின் முழுமையான விழிப்புணர்வு கட்டுப்பாட்டில் சுவாசம் இருக்கும். ( அதற்கு நீண்ட பயிற்சி தேவை).

இந்த நிலையில் வாசி யோகியின் உடலில் உள்ள நச்சு பொருட்கள் மற்றும் கபம் முழுமையாக வெளியேற்றப்பட்டு இருக்கும்.

இதை கைவரப்பெற்ற வாசி யோகி தனது பெளதீக உடலையும் சேர்த்து 6 சக்தியுடல்களை பிரிந்து இயக்கும் அல்லது கையாளும் ஆற்றலை பெற்று இருப்பார்.

இந்த பெளதீக உடலின் தேவைகள் போதும் என தீர்மானிக்கும் வாசி யோகி, சூட்சம சக்தி உடல்  (astral body )வழியாக அனைத்தை நன்மைகளையும் தனக்கும் மற்றும் இந்த உலகிற்கும் செய்து கொள்ள இயலும் என உறுதியாக தீர்மானிக்கும் பட்சத்தில், ஜீவ சமாதி நிலைக்கு தயார் ஆகிறார்.

ஒரு வாசி யோகி ஜீவ சமாதி ஆகவேண்டும் தீர்மானித்தால், தீர்மானிக்கும் நிலையில் இருந்து குறைந்த பட்சம் 5 வருடங்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்.

உடலை, இந்திரியங்களை, மனதை, நாடிகளை, சக்தி மையங்களை, சக்தி உடல்களை சரிவர இயக்கி கையாள பழக வேண்டும்.

இவை அனைத்தும் சந்தேகமின்றி கையாள கூடிய வாசி யோகி, ஜீவ சமாதி அடைய அனைத்து தகுதியும் உடையவர் ஆகிறார்.

ஜீவ சமாதி அடைவது என்பது மாபெரும் விஞ்ஞானம்.


Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...