Skip to main content


ஜீவ சமாதி ஆக வேண்டும் என வாசி யோகி தீர்மானித்தால் அதற்கு சில முக்கிய செயல்பாடுகளை தீவிரமாக செய்ய வேண்டும்.

1) வாசி யோகா
2) உணவின்றி காற்றை சுவாசித்து வாழும் பயிற்சி,
3) நமது சக்தி உடல்கள், சக்தி மையங்கள் மற்றும் நாடிகளை பற்றிய தெளிவான புரிதல்.

இவற்றை சரியாக தெரிந்து இருத்தல் மற்றும் முழுமையான பயிற்சி அவசியம்.

வாசி யோகாவில் ஆரம்ப நிலையில் இருந்து ஊர்த்தவ வாசியில் (18 வகைகள் உள்ளது).

நல்ல பயிற்சி பெற்ற பின் ஶ்ரீ கிருஷ்ண வாசியில் முழுமையான நிபுணத்துவம் பெற வேண்டும். இயல்பாக ஶ்ரீ கிருஷ்ண வாசி இயங்க வேண்டும்.

ஆரம்ப வாசி பயிற்சி மற்றும் ஊர்த்தவ வாசியில் இழுக்கும் உட்சுவாசம் குறைவாகவும், விடும் உட்சுவாசம் நீண்டும் இருக்கும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசியில் இழுக்கும் உட்சுவாசம் நீண்டும், விடும் உட்சுவாசம் குறைந்தும் இருக்கும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசிக்கும் மற்ற ஊர்த்தவ வாசிக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் உள்ளது. ஊர்த்தவ வாசியானது சக்தி உடல்கள் மற்றும் சக்தி மையங்களின் மேல் அதீத விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசியானது கேவல கும்பகத்தை இயல்பாக உருவாக்கும். ( அது தான் இறுதியில் மிக அவசியமானது) 

ஊர்த்தவ வாசியை குறைந்த பட்சம் 15 லட்ச உட்சுவாசத்தை செய்தால், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் மாபெரும் தாக்கத்தை உருவாக்கிவிடும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும்.

ஶ்ரீ கிருஷ்ண வாசியானது உண்ணாக்கிற்கும், பீனியல் சுரப்பிக்கும் நடுவே இயங்க கூடியது. கேவல கும்பகத்தை இயல்பாக உருவாக்க கூடியது.

நுரையீரல் மற்றும் மூக்கை பயன்படுத்தாமல் உண்ணாக்கு மற்றும் பீனியலுக்கு இடையே சுவாசித்து வரும் போது, உடலில் உள்ள ரோம துளைகள் காற்று,பூமி மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்சக்தியை சுவாசிக்க ஆரம்பிக்கும். ( சவ்வூடு பரவுதல் எனும் முறையை போலவே)

இந்த நிலையில் மூக்கு மற்றும் நுரையீரல் தேவைகள் இல்லாமல் ஆகிவிடும்.  இடா மற்றும் பிங்கல நாடிகளின் இயக்கம் முழுமையாக நின்று போய், சுழுமுனை நாடியின் இயக்கம் முழுமையாக இயங்க தொடங்கும். இந்த நிலை தொடர்ந்து நிகழும் போது, உண்ணாக்கு மற்றும் பீனியல் சுரப்பிக்கு நடுவே இயங்கும் உட்சுவாசமானது, கேவல கும்பகமாகி நின்று விடும். மிக இயல்பாக, எந்த வித சிரமமும் இல்லாது சுவாசம் அதற்கு அடங்கி நிற்கும்.

ஆனால் வாசி யோகியின் முழுமையான விழிப்புணர்வு கட்டுப்பாட்டில் சுவாசம் இருக்கும். ( அதற்கு நீண்ட பயிற்சி தேவை).

இந்த நிலையில் வாசி யோகியின் உடலில் உள்ள நச்சு பொருட்கள் மற்றும் கபம் முழுமையாக வெளியேற்றப்பட்டு இருக்கும்.

இதை கைவரப்பெற்ற வாசி யோகி தனது பெளதீக உடலையும் சேர்த்து 6 சக்தியுடல்களை பிரிந்து இயக்கும் அல்லது கையாளும் ஆற்றலை பெற்று இருப்பார்.

இந்த பெளதீக உடலின் தேவைகள் போதும் என தீர்மானிக்கும் வாசி யோகி, சூட்சம சக்தி உடல்  (astral body )வழியாக அனைத்தை நன்மைகளையும் தனக்கும் மற்றும் இந்த உலகிற்கும் செய்து கொள்ள இயலும் என உறுதியாக தீர்மானிக்கும் பட்சத்தில், ஜீவ சமாதி நிலைக்கு தயார் ஆகிறார்.

ஒரு வாசி யோகி ஜீவ சமாதி ஆகவேண்டும் தீர்மானித்தால், தீர்மானிக்கும் நிலையில் இருந்து குறைந்த பட்சம் 5 வருடங்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்.

உடலை, இந்திரியங்களை, மனதை, நாடிகளை, சக்தி மையங்களை, சக்தி உடல்களை சரிவர இயக்கி கையாள பழக வேண்டும்.

இவை அனைத்தும் சந்தேகமின்றி கையாள கூடிய வாசி யோகி, ஜீவ சமாதி அடைய அனைத்து தகுதியும் உடையவர் ஆகிறார்.

ஜீவ சமாதி அடைவது என்பது மாபெரும் விஞ்ஞானம்.


Comments

Popular posts from this blog

லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...

Karma Sastra

KARMA कर्म கர்மா சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே ! ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே ! ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே -------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē! Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē! Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē -------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Sanchita is the residual balance karma that follows ! Prarapta is that which is now experienced in this life ! Akami is balance accumulated in this life carried over When the balance of all 3 is nil, then there is no rebirth  ------------------------------------------------------------- What is Prarabdha Karma? A collection of past actions, which are ready to be experienced through t...
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு ...