Skip to main content
ஆத்ம தரிசனம்!
           ( குரு _ சிஷ்யன்)
சிஷ்யன் : ஐயனே!  யோகம்  என்பது
என்ன?
குரு : எதனை  அடைவதற்காகப் பயிற்சி  செய்கிறோமோ, அந்தப் பயிற்சிமுறை  "யோகம்" என்று  அழைக்கப்படும். இன்னொன்று  எதனை  அடைந்தால்,  அனைத்தையும்  அடைந்தது ஆகுமோ, அதனை அடைவதும் _ அதிலேயே நிலைபெறுவதும் அல்லது  அதனுடன்  ஐக்கியமாதலும் "யோகம்"என வழங்கப்படுகிறது.

 மேலானவனே! பயிற்சிமுறை யோகமானது  பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், அஷ்டாங்கயோகம் அல்லது வாசி யோகம் எனப் பலவகைகளாகச் சொல்லப்படுகிறது. அவரவர்களின்
கர்மவினைகளுக்கு ஏற்ப  சிலர் பக்தியை, சிலர் ஞானத்தை, சிலர் கர்மத்தை, மற்றும் சிலர் அஷ்டாங்க யோகப்பயிற்சியை  உபதேசிக்கின்றனர்.

  எதனையும்  அறிந்து  செய்தால், அவ்வினையால் நலம் விளையும்!
எதனை அடைவதற்காகப்  பக்தியோகம்  செய்யப்படுகிறதோ, அதேபலனை அடைவதற்காகத்தான் அஷ்டாங்க யோகமும், அதே பலனுக்காகத்தான்
கர்மயோகமும்  அனுஷ்டிக்கப்படுகிறது. மேலானதை அறிவதற்கும், அதனை 
அடையச் செய்யப்படும் பயிற்சிக்கும் ஞானமே அதாவது அறிவே பிரதானம்(முக்கியமானது).
ஆகையால்  ஞானயோகமே  சிறப்பானது. 
   
  ஞானம் வேறு, யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள்.  அறிந்தவர்க்கு ஞானமும்  யோகமும் ஒன்றே. எந்த
யோகப் பயிற்சி முறைக்கும் அடிப்படையாகவும், அடையப் படவேண்டிய  இலக்காகவும் ஞானமே உள்ளபடியால், ஞானமே பிரதானமானது. எல்லாக்  கர்மத்திற்கும் அதாவது எல்லா யோகப்பயிற்சி முறைகளுக்கும்
ஆதாரமாகவும், இலக்காகவும் ஞானமே உள்ளதால், ஞானயோகப்
பயிற்சி சிறப்பானது.

   வேதத்தின் இறுதிப் பகுதியான  வேதாந்தம்(உபநிஷத்) ஞானத்தையே  மேலானதாகப் போற்றுகிறது. சிஷ்யர்கள்  தேடுவதும், குருமார்கள் உபதேசிப்பதும் ஞானத்தைத்தான்!
 
 மேலானவனே! நான் சொன்னவற்றை எல்லாம் சிரத்தையுடன் கேட்டுவரும் உனக்கு,
பலவகையான பயிற்சிமுறைகளை (யோகங்களை)இதுவரை  உபதேசித்த நான், இனி எதனை அடைவதற்காக  இந்தப் பயிற்சி முறைகள்(யோகங்கள்) அனுஷ்டிக்கப் படுகின்றனவோ, அதனைப்பற்றி விளக்குகின்றேன்
கேள். யோகப் பயிற்சியால் அடையப்படும் நிலையும், பின்னர்
அதிலேயே நிலைத்திருப்பதும் கூட
"யோகம்" என்றே அழைக்கப்படுகிறது.

  தோன்றி மறைவதை அதாவது கால_ தேச எல்லைக்கு உட்பட்டதை விரும்புதல் பந்தம் எனப்படும். தோன்றாமலும் மறையாமலும் உள்ளதை அதாவது  ஆதி அந்தம்
அற்றதை(முதலும் முடிவும் இல்லாததை) அடைய விரும்புதல்
வைராக்கியம் எனப்படும். இந்த வைராக்கியமே யோகத்திற்கு அடிப்படை .  தூயவனே! ஒருவன் இடைவிடாமல், சலிப்பின்றி  யோகப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு
வைராக்கியமே ஊன்றுகோல்
போன்றது. உலகப் பொருட்களின்
மீது வெறுப்புக்  கொள்வது வைராக்கியம் அன்று.

  எது ஆரம்பம் இல்லாததோ, எது
முடிவும்  இல்லாததோ_ அது எங்கும்
நிறைந்தது. எவரெல்லாம் தனது இடைவிடாத, தொடர்ந்த வைராக்கியப் பயிற்சியால், எதனை
அடைந்தால் அனைத்தையும் அடைந்தது ஆகுமோ, "அது"_ எங்கும் நிறைந்தது_ ஒன்றே ஆனது_ காலத்திற்கு  உட்படாத நித்யப் பொருள் என்பதை அறிவர்.எந்த "அறிபவனால்"  எந்த  "அறிவு" கொண்டு  எந்த "அறியப்படுபொருள்" ஒன்றே ஆனதாக அறியப்படுகிறதோ, அந்த நிலையில்  அறிபவன், அறிவு, அறியப்படுபொருள் அனைத்தும்,
பிறப்பு_ இறப்பு அற்ற, ஒன்றே ஆன அந்த மெய்ப்பொருளுடன் ஐக்கியமாகிப் போகும். இந்த  அனைத்தும் தானே ஆன மெய்ப்பொருள் "தானே" ஆகி, அதில் நிலைத்திருத்தலே அடையப்படும் "யோகம்" எனப்படும்.

 மேலானவனே! இதுகாறும் உனக்கு
பயிற்சி யோகம் பற்றியும், மேலான
பரமபதத்தில் நிலைபெறும் யோகம் பற்றியும் விளக்கினேன்.

  பற்றற்றவனே! கவனமுடன் கேட்டுவரும்  உனக்கு மங்களம் உண்டாகட்டும்.நம் இருவருக்கும் இடையே  நடைபெற்ற  இந்த  சம்பாஷணையை  எவரெல்லாம்
படிக்கின்றார்களோ, அவர்களுக்கும்
மங்களம் உண்டாகட்டும்!

Comments

Popular posts from this blog

லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...

Karma Sastra

KARMA कर्म கர்மா சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே ! ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே ! ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே -------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē! Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē! Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē -------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Sanchita is the residual balance karma that follows ! Prarapta is that which is now experienced in this life ! Akami is balance accumulated in this life carried over When the balance of all 3 is nil, then there is no rebirth  ------------------------------------------------------------- What is Prarabdha Karma? A collection of past actions, which are ready to be experienced through t...
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு ...