Skip to main content
சிதம்பர சக்கரம்
==============

சித்தம் ஆகாசத்தொடு இணையும் போது அதுவே சிதம்பரம். இங்கே கொடுக்கப்பட்ட 'சிதம்பர' சக்கரத்தில் பஞ்சாட்சரம் மந்திரம் உண்டு. வாலையை உணர்ந்தால் அதுவே சச்சிதானந்தம். (சத்+சித்து+ஆனந்தம்)

"ஐம்பதொரட்சரந்தான் ஆச்சு,
நெஞ்ஜெழுத்தாலே நினையா மலந்த
நிசந்தெரியுமொ வாலைப் பெண்ணே.
நோக்கிகோல் வாசியை மேலாக வாசி,
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே.
சிதம்பர சக்கரம் தானரிந்தார்
சீமையில் உள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரமென்றால் அதற்குள்
தெய்வத்தை யல்லவோ அறிய வேணும்"

இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக, வந்து கொண்டே இருக்கும். அதாவது வாசியோகத்தில் இருக்கும் எவருக்குமே சித்திக்கும் இந்த ஜோதியானது, சஹாஸ்ரத்தில் மேல்நோக்கியே இருக்கும். ‘உன் உடலை வெறும் உப்பிட்ட பாண்டம் என்று மட்டும் எண்ணாதே, அதை பேணவேண்டும்’ என்கிறார்கள் சித்தர்கள். காலங்கிநாதர், போகர், போன்ற சித்தர்கள் எல்லோருமே மேலே சொன்ன இந்த வரிகளை தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர்.

செப்பு தகட்டில் இந்த சக்கரத்தை செய்து வைத்துள்ளவர்கள், முறையாக அதை ஆராதிக்க வேண்டும். பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து அதை இந்த சக்கரம் மேலே கையால் தேய்த்து பூசி, மையத்தில் குங்குமம் இட்டு வெள்ளை மலர்கள் சாற்றி , தூபம் காட்டியபின். தங்கள் தியானத்தை செய்து வரவேண்டும். சில வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ அது உங்களை அறியாமல் உங்களுக்குள் ஆன்ம சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்.

உங்கள் ஆதார சக்கரத்தின் சக்தி நிலைக்கு ஏற்பத்தான் இந்த உயர்வு அமையும். நம் உடலில் உள்ள ஆறாதார சக்கரங்களான மூலாதாரம் முதல் ஆக்னேயம்வரை அனைத்து கதவுகளையும் திறந்து கொண்டுபோனபின் கபாலம் என்ற சிரசில் இலயிக்க ஆனந்தம் தோன்றும். சிலருக்கு சிலது இயங்கும் சில சக்ரங்கள் பழுதுபட்டிருக்கும். அதில் தடையில்லாமல் ஓட்டத்தை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள்.

நம் மனதை அடக்கியாளவும் அமைதிபடுத்தவும் மனதையே கட்டளைகள் பிரப்பிக்கவைத்து  உடன்படுத்தமுடியாது, அது நடக்காது. அதை திசைத் திருப்பத்தான் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும், அந்த மூச்சின் ஓட்டத்தை அண்ணாக்கின் மேலே மானசீகமாக நின்று கவனிக்கவேண்டும். இதன் அதீத ஆழ்ந்த முறைதான் வாசி பயிற்சி. இதன் மூலம் சக்கரங்களை திறந்துகொண்டு ஆகாய வாசலுக்கு செல்லலாம் என்கிறார்கள். ஆறாதார சக்கரங்கள்தான் பூமி, சஹாஸ்ரம்தான் ஆகாயம், மூலதாரத்துக்கு கீழே முழங்கால்வரை பாதாளம், அதன் கீழே பாதம் வரை அதல பாதாளம் என்று சக்தி சக்கரங்கள் /கதவுகளை வரிசை படுத்தியுள்ளனர்.

இவ்வாரக தெய்வம் இருக்கையில், புத்தி கெட்ட மாண்பர்கள், தங்கள் ஆகாச சக்ரத்தின் கதவு திறந்து வாலை தெய்வத்தை காணமலே சாகின்றதேன் என்று கேள்வி கேட்கிறார் போகர். 

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.