Skip to main content
சிதம்பர சக்கரம்
==============

சித்தம் ஆகாசத்தொடு இணையும் போது அதுவே சிதம்பரம். இங்கே கொடுக்கப்பட்ட 'சிதம்பர' சக்கரத்தில் பஞ்சாட்சரம் மந்திரம் உண்டு. வாலையை உணர்ந்தால் அதுவே சச்சிதானந்தம். (சத்+சித்து+ஆனந்தம்)

"ஐம்பதொரட்சரந்தான் ஆச்சு,
நெஞ்ஜெழுத்தாலே நினையா மலந்த
நிசந்தெரியுமொ வாலைப் பெண்ணே.
நோக்கிகோல் வாசியை மேலாக வாசி,
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே.
சிதம்பர சக்கரம் தானரிந்தார்
சீமையில் உள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரமென்றால் அதற்குள்
தெய்வத்தை யல்லவோ அறிய வேணும்"

இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக, வந்து கொண்டே இருக்கும். அதாவது வாசியோகத்தில் இருக்கும் எவருக்குமே சித்திக்கும் இந்த ஜோதியானது, சஹாஸ்ரத்தில் மேல்நோக்கியே இருக்கும். ‘உன் உடலை வெறும் உப்பிட்ட பாண்டம் என்று மட்டும் எண்ணாதே, அதை பேணவேண்டும்’ என்கிறார்கள் சித்தர்கள். காலங்கிநாதர், போகர், போன்ற சித்தர்கள் எல்லோருமே மேலே சொன்ன இந்த வரிகளை தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர்.

செப்பு தகட்டில் இந்த சக்கரத்தை செய்து வைத்துள்ளவர்கள், முறையாக அதை ஆராதிக்க வேண்டும். பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து அதை இந்த சக்கரம் மேலே கையால் தேய்த்து பூசி, மையத்தில் குங்குமம் இட்டு வெள்ளை மலர்கள் சாற்றி , தூபம் காட்டியபின். தங்கள் தியானத்தை செய்து வரவேண்டும். சில வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ அது உங்களை அறியாமல் உங்களுக்குள் ஆன்ம சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்.

உங்கள் ஆதார சக்கரத்தின் சக்தி நிலைக்கு ஏற்பத்தான் இந்த உயர்வு அமையும். நம் உடலில் உள்ள ஆறாதார சக்கரங்களான மூலாதாரம் முதல் ஆக்னேயம்வரை அனைத்து கதவுகளையும் திறந்து கொண்டுபோனபின் கபாலம் என்ற சிரசில் இலயிக்க ஆனந்தம் தோன்றும். சிலருக்கு சிலது இயங்கும் சில சக்ரங்கள் பழுதுபட்டிருக்கும். அதில் தடையில்லாமல் ஓட்டத்தை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள்.

நம் மனதை அடக்கியாளவும் அமைதிபடுத்தவும் மனதையே கட்டளைகள் பிரப்பிக்கவைத்து  உடன்படுத்தமுடியாது, அது நடக்காது. அதை திசைத் திருப்பத்தான் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும், அந்த மூச்சின் ஓட்டத்தை அண்ணாக்கின் மேலே மானசீகமாக நின்று கவனிக்கவேண்டும். இதன் அதீத ஆழ்ந்த முறைதான் வாசி பயிற்சி. இதன் மூலம் சக்கரங்களை திறந்துகொண்டு ஆகாய வாசலுக்கு செல்லலாம் என்கிறார்கள். ஆறாதார சக்கரங்கள்தான் பூமி, சஹாஸ்ரம்தான் ஆகாயம், மூலதாரத்துக்கு கீழே முழங்கால்வரை பாதாளம், அதன் கீழே பாதம் வரை அதல பாதாளம் என்று சக்தி சக்கரங்கள் /கதவுகளை வரிசை படுத்தியுள்ளனர்.

இவ்வாரக தெய்வம் இருக்கையில், புத்தி கெட்ட மாண்பர்கள், தங்கள் ஆகாச சக்ரத்தின் கதவு திறந்து வாலை தெய்வத்தை காணமலே சாகின்றதேன் என்று கேள்வி கேட்கிறார் போகர். 

Comments

Popular posts from this blog

லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...

Karma Sastra

KARMA कर्म கர்மா சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே ! ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே ! ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே -------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē! Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē! Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē -------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Sanchita is the residual balance karma that follows ! Prarapta is that which is now experienced in this life ! Akami is balance accumulated in this life carried over When the balance of all 3 is nil, then there is no rebirth  ------------------------------------------------------------- What is Prarabdha Karma? A collection of past actions, which are ready to be experienced through t...
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு ...