Skip to main content

Posts

#தெய்வம்_தேடிவந்து_அருளும்! #திருமூலர்_மந்திர_ரகசியம்; செல்வம், தெளிந்த அறிவு, பெருமை, மிகவும் உயர்ந்த நிலை - இவற்றை விரும்பாதவர் யார்? இவற்றை அடையும்  வழி என்ன? திருமூலர் சொல்கிறார். பிரான் அருள் உண்டு எனில் உண்டு நற்செல்வம் பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல்ஞானம் பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே  (திருமந்திரம் - 1645) கருத்து : சிவபெருமான் அருள் இருந்தால், அனைத்து விதமான செல்வங்களும் உண்டாகும். சிவபெருமான் அருள்  இருந்தால், அறிவு நலம் அடையலாம். சிவபெருமான் அருள் பெறுதற்கரிய பெருமைகளை அருளும், சிவபெருமான்  அருள் இருந்தால் தெய்வ நிலையையும் அடையலாம். வரிவரியாக மட்டுமல்ல, வார்த்தை வார்த்தையாக அனுபவித்து  உணர வேண்டிய பாடல் இது. பிரான் அருள் - என நான்கு வாக்கியங்களிலும் சொன்ன திருமூலர் முதல் இரண்டு வரிகளில் ‘நல்’ என்ற  சொல்லையும், பின் இரண்டு வரிகளில் ‘பெரும்’ என்ற சொல்லையும் இருமுறைகள் பிரயோகித்து  உள்ளார்.குருவருளும், திருவருளும் துணை கொண்டு இயன்றவரை அனுபவிக்கலாம் வாருங்கள்!பிரான் என்ற  சொல...
*சிவாயநம* _பிரதோசம்_:-  *_பிறவி தோசம் போக்கும்_* _நாள்..._ _இந்நாள் அன்று நமக்குள் எழும் கேள்வியும் அதனால் எழுகின்ற விடையும் நம்மை வரும் பிறவி பிணியில் இருந்து விடுபட வைக்கும்..._ *_கேள்வியும் அதற்க்கான விடையும் உங்கள் முன்..._* *1🔥. எதற்க்காக இந்த மானுட பிறவியை எடுத்தோம்...?* _வீட்டை விட்டு வெளியேறி கூட்டை அடைந்தோம் அந்த கூட்டை விட்டு வெளி வரும் முன் வீட்டின் வழி அறிந்து மீண்டும் வீடு செல்ல வேண்டும்..._ _கடந்த ஆறு பிறப்பு எடுத்த நாம் மீண்டும் ஏழாம் பிறப்பான மானுட பிறவியில் *நல்விணை தீவிணை* மயக்கம் கொண்டு மீண்டும் பிறப்பு எடுக்க உண்மை அறியாது மாயையில் உழன்று வருகிறோம் அந்த மாயை பிடியில் இருந்து விலக நம்மை உணர மூன்று காலத்தின் தன்மை இது என்று அறிய வேண்டி பிறவி கடலில் இருந்து வெளி வர உண்மை பொருளை உணர்ந்து இப்பிறவி பயன் இது என்று அறிய நாம் மனதை அடக்க இயற்கையாவும் குருவாய் வந்து உபதேசிக்கும் பொழுது பிறவி கடன் தீருமே..._ *கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்* *இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்* *மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்* *உறுவினைப்பயன் இ...
அதிசய அற்புத ஸ்தலங்கள் அதிசய அற்புத ஸ்தலங்கள் அதிசய அற்புத ஸ்தலங்கள் #நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்! பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம்.  கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர். ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.  அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி  தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும். இன்றைய அறிவு ஜீவிகளால் இதற்கு சரியான விளக்கம் தர முடியுமா? ஒருமுறை போய் அனுபவித்து பாருங்கள். #பெருமாளே சிவனாக மாறும் விந்தை! திருப்பதி என்று கேட்டவுடன் பெருமாளும், வைஷ்ணவத்தின் உச்ச ஸ்தலம் என்பதும் எல்லோர் எண்ணத்திலும் உதிக்கும்.  அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்...
அஷ்டமா சித்திகளும் மூலாதார சக்கரங்களும்                          மனித உடலில் 7 வகையான  சக்கரங்கள் உள்ளன அவையாவன,  மூலாதாரம், சுவதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்காரம். மனிதனுக்கு ஆறறிவு படைத்த இறைவன் மனித உடலிலும் ஆறு சக்கரங்களையே படைத்தான் - 7 வது சக்கரமான சகஸ்காரம் என்பது மனித உடலை தாண்டியே அமைந்துள்ளது, ஆறு சக்கரங்களை அடைந்தாலே மனிதன் நினைத்ததை எல்லாம் அடைய முடியும், இந்த ஆறு சக்கரங்களை அடைவதே மிகவும் கடினம், இந்த ஆறு அல்ல எட்டு சக்கரங்களை அடைவதே அஷ்டமா சித்தி இதனை சித்தர்கள் மட்டுமே எட்டியுள்ளனர். இதில் எட்டாவது சக்கரம் எனப்படுவது அண்டவெளி ஆகும். இந்த சக்கரங்களின் மகிமையை அறியாமல் தான் என்ன பாடுபட்டேன் என்பதை பட்டினத்தார் அழகாக எழுதி உள்ள பாடலின் வாயிலாக காண்போம். மூலத்து உதித்து எழுந்த முக்கோண சக்கரத்துள்        வாலை தன்னை போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே ! உந்தி கமலத்தில் உதித்து நின்ற பிரம்மாவை        சந்தித்து காணாமல் நட்டழிந்தேன் பூரணம...
15)  ஆனி 2 (16/6/18)ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி திருச்சிற்றம்பலக் காேவை -ஸ்ரீலஸ்ரீ மாணிக்க வாசக சிவ மகா சன்னிதாத்தின்  மருபக்கம் - பகற்குறி  (2) ஆடிடம் படர்தல் காெளு: ........... வண்தழை எதிர்ந்த ஒண்டாேடி பாங்கி நீடமைத் தாேளியாேடு ஆடிடம் படர்ந்தது!! .................................................................... தலைவன் தந்த வண்தழையை ஏற்றக்காெண்ட வளையல் அணிந்த தாேழி, நீண்ட தாேளுடைய தலைவியாேடு விளையாடு்ம் இடத்திற்கு சென்றது!!அதாவது ஆன்மாவின் குழைந்துருகும் அன்பினை ஏற்றக்காெண்ட திருவருள் சிவத்தாேடு,சிவம் விளையாடு அருள் விளையாட்டு இடத்திற்கு சென்றது!! ....................................................................... புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பாென்   னாேன்பினைப் பேய்பாெலியும் அயல்வளர் குன்றில்நின் றேற்றும்   அருவி திருவுருவில் கயல்வளர் வாட்கண்ணி பாேதரு    காதரம் தீரத்தருளும் தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே!! ....................................................................... பாென்னை ஒத்த வாட்...
சித்தர்களின் ஜீவ சமாதி பீடங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறையுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும் மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கின்றார்கள் பதினெட்டுச் சித்தர்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டைதிருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல்மாசிலாமணீஸ்வரர்ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரும்...
காயத்ரி மந்திரத்தை அன்றாடம் சொல்வதால் என்ன நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா..இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளில் மிக முக்கிய பங்கை வகிப்பது மந்திரங்கள் ஓதுவது. கோவில்களில் கடவுளுக்கு பூஜை செய்யும் போது, பூசாரிகள் பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த மந்திரங்கள் ஓதப்படுகிறது என்பது என்றைக்காவது உங்களுக்கு தோன்றியதுண்டா? அல்லது ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு மந்திரம் என ஏன் வைத்திருக்கிறோம் என்பதையும். அவைகளுக்குள் என்ன வேறுபாடுகள் என்பதையும் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பலரும் அதை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்திருக்கவே மாட்டோம். ஆனால் இப்படி பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதால் நீங்கள் நினைப்பதை விடவும் அதிகளவில் தாக்கங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படும். மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விசேஷ ஒலியுள்ளது. சமஸ்கிருத மந்திரங்களை ஓதும் போது, ஒலி என்பது மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக உச்சரிக்கும் போது உங்களுக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால் உங்களுக்கு சக்தியும் வலுவும் கிட்டும். ...