Skip to main content
வேல் வழிபாட்டின் மகத்துவம்:

முருகப் பெருமானின் திருக்கை வேலில் ஒரு அதிரகஸ்ய தத்துவம் உண்டு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவ வழிபாடுகள் இல்லாத காலங்களில் கூட வேல் வழிபாடு இருந்துள்ளது.

ஆலயங்கள் அமைக்கபடாத காலங்களிலும் வேல், சூலம் போன்ற ஆயுதங்களை வைத்து நம் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். ஏன் வேல் வழிபாட்டிற்கு அத்தனை சிறப்பு என்றால் வேல் தான் ஆன்மாவின் வடிவம், உயிர் வேலின் வடிவம். வேலில் அத்தகைய அற்புத ஷக்தி என்ன இருக்கிறது?, என்றால் அதுவே உண்மை விளக்கமும் ஆகும். ஓம்காரத்தை தீர்க்கமாகவும் பக்தியுடனும் ஒருவர் ஓங்கி உச்சரிக்கும் பொழுது நாபியில் இருந்து எழும் அந்த ஓசை ஆதார சக்ரங்களை கடந்து மேலே விரிந்து ஞான ஒளிப்பிழம்பாக ஸாதகனுக்கு அறியாமலேயே அந்த வேலின் வடிவமாக அவர் மாறிவிடுகிறார்.

அதனால் அந்த நேரத்தில் உடலின் யோக சூக்ஷ்ம நிலையங்களில் ப்ராண சஞ்சாரம் சீராக நடைபெறுகிறது.வாசி யோக நுட்பங்கள் குறித்து அறியாதவருக்கும் கூட அந்த முறையான நிலையை ஓம்காரத்தை சீராக உச்சரிக்கும்போது எட்ட முடிகின்றது. இடகலை பிங்கலை யோகங்கள் என ஏதும் அறிய வேண்டியதில்லை. அஷ்டமா சித்திகளையும் கடந்த ஸமாதி யோகத்தை கூட ஸாதகன் ஷக்தி வேலை முறையாக உபாஸிக்க கிடைக்கும். அது அம்பிகையின் ப்ரீதியாகிறது. ஸ்ரீ வித்யைக்கு நிகரான உபாஸனை வேல் வழிபாடு ஒன்றே ஆகும்.

ஓம் முருகா போற்றி

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.