வேல் வழிபாட்டின் மகத்துவம்:
முருகப் பெருமானின் திருக்கை வேலில் ஒரு அதிரகஸ்ய தத்துவம் உண்டு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவ வழிபாடுகள் இல்லாத காலங்களில் கூட வேல் வழிபாடு இருந்துள்ளது.
ஆலயங்கள் அமைக்கபடாத காலங்களிலும் வேல், சூலம் போன்ற ஆயுதங்களை வைத்து நம் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். ஏன் வேல் வழிபாட்டிற்கு அத்தனை சிறப்பு என்றால் வேல் தான் ஆன்மாவின் வடிவம், உயிர் வேலின் வடிவம். வேலில் அத்தகைய அற்புத ஷக்தி என்ன இருக்கிறது?, என்றால் அதுவே உண்மை விளக்கமும் ஆகும். ஓம்காரத்தை தீர்க்கமாகவும் பக்தியுடனும் ஒருவர் ஓங்கி உச்சரிக்கும் பொழுது நாபியில் இருந்து எழும் அந்த ஓசை ஆதார சக்ரங்களை கடந்து மேலே விரிந்து ஞான ஒளிப்பிழம்பாக ஸாதகனுக்கு அறியாமலேயே அந்த வேலின் வடிவமாக அவர் மாறிவிடுகிறார்.
அதனால் அந்த நேரத்தில் உடலின் யோக சூக்ஷ்ம நிலையங்களில் ப்ராண சஞ்சாரம் சீராக நடைபெறுகிறது.வாசி யோக நுட்பங்கள் குறித்து அறியாதவருக்கும் கூட அந்த முறையான நிலையை ஓம்காரத்தை சீராக உச்சரிக்கும்போது எட்ட முடிகின்றது. இடகலை பிங்கலை யோகங்கள் என ஏதும் அறிய வேண்டியதில்லை. அஷ்டமா சித்திகளையும் கடந்த ஸமாதி யோகத்தை கூட ஸாதகன் ஷக்தி வேலை முறையாக உபாஸிக்க கிடைக்கும். அது அம்பிகையின் ப்ரீதியாகிறது. ஸ்ரீ வித்யைக்கு நிகரான உபாஸனை வேல் வழிபாடு ஒன்றே ஆகும்.
ஓம் முருகா போற்றி
முருகப் பெருமானின் திருக்கை வேலில் ஒரு அதிரகஸ்ய தத்துவம் உண்டு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவ வழிபாடுகள் இல்லாத காலங்களில் கூட வேல் வழிபாடு இருந்துள்ளது.
ஆலயங்கள் அமைக்கபடாத காலங்களிலும் வேல், சூலம் போன்ற ஆயுதங்களை வைத்து நம் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். ஏன் வேல் வழிபாட்டிற்கு அத்தனை சிறப்பு என்றால் வேல் தான் ஆன்மாவின் வடிவம், உயிர் வேலின் வடிவம். வேலில் அத்தகைய அற்புத ஷக்தி என்ன இருக்கிறது?, என்றால் அதுவே உண்மை விளக்கமும் ஆகும். ஓம்காரத்தை தீர்க்கமாகவும் பக்தியுடனும் ஒருவர் ஓங்கி உச்சரிக்கும் பொழுது நாபியில் இருந்து எழும் அந்த ஓசை ஆதார சக்ரங்களை கடந்து மேலே விரிந்து ஞான ஒளிப்பிழம்பாக ஸாதகனுக்கு அறியாமலேயே அந்த வேலின் வடிவமாக அவர் மாறிவிடுகிறார்.
அதனால் அந்த நேரத்தில் உடலின் யோக சூக்ஷ்ம நிலையங்களில் ப்ராண சஞ்சாரம் சீராக நடைபெறுகிறது.வாசி யோக நுட்பங்கள் குறித்து அறியாதவருக்கும் கூட அந்த முறையான நிலையை ஓம்காரத்தை சீராக உச்சரிக்கும்போது எட்ட முடிகின்றது. இடகலை பிங்கலை யோகங்கள் என ஏதும் அறிய வேண்டியதில்லை. அஷ்டமா சித்திகளையும் கடந்த ஸமாதி யோகத்தை கூட ஸாதகன் ஷக்தி வேலை முறையாக உபாஸிக்க கிடைக்கும். அது அம்பிகையின் ப்ரீதியாகிறது. ஸ்ரீ வித்யைக்கு நிகரான உபாஸனை வேல் வழிபாடு ஒன்றே ஆகும்.
ஓம் முருகா போற்றி

Comments
Post a Comment