யாருக்கெல்லாம் இந்தக் கேள்வி மூளையைக் குடைந்து கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் ஆன்மீகத்தில் ஏறக்குறைய பாதி கரை கடந்து விட்டார்கள் என்று தான் பொருள்.
.
என்ன செய்தால் பிறவியை அறுக்க முடியும்?
.
*** விடாமல் பிராணாயாமம் செய்தால் பிறவியை வென்று விடுவேனா?
.
*** வாசி யோகம் தொடர்ச்சியாக செய்து வந்தால் பிறவியை வென்று விடுவேனா?
.
*** குண்டலினியை சஹஸ்ராரத்தில் ஏற்றி நிறுத்திவிட்டால் பிறவியை வென்று விடுவேனா?
.
.....என்றால், "இல்லை".
...
இவை அனைத்தும் நம் உடலையும் மனதையும் ஆன்மீகத்துக்கு தயார் படுத்தும் நெறிமுறைகள்.
இவற்றையெல்லாம் நித்தம் கடைபிடித்து வருவதால், என்னுடைய உடலும், மனதும், ஆன்மாவும் - ஆன்மீகத்துக்கு பக்குவமடைந்து ரெடி ஆகி விடுகிறது. அவ்வளவே...
...
இந்த பிராணாயாமம், தியானம், வாசி யோகம், குண்டலினி - இவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால் - சித்திகள் செய்ய முடியும்.
...
(சின்ன சின்ன சித்திகள் நிகழும்.)
...
கேள்வி அதுவல்ல.... பிறவியை அறுப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
...
பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.
... சரி.... இந்த நொடி முதல் எந்த வித பாவங்களும் செய்வதில்லை என்று முடிவெடுத்தாயிற்று.
...
புண்ணியங்கள் நிறைய செய்ய வேண்டுமா?
... பாவங்களைக் குறைத்துக் கொண்டு (அல்லது முற்றிலும் செய்யாமல்), புண்ணியங்கள் மட்டும் நிறைய செய்து வந்தால், பிறவி அறுபடுமா?
....
...
பெருமக்களே...!!!
பாவங்கள் செய்தால், எப்படி அதை அனுபவிப்பதற்காக மீண்டும் பிறப்பு எடுப்பீர்களோ, அதே போல் புண்ணியம் செய்தால், அந்த சுகத்தை அனுபவிக்கவும் பிறவி எடுத்து தான் தீருவீர்கள்... நிறைய புண்ணியம் செய்து விட்டு இறந்து போனால், நீங்கள் கூட அடுத்த பிறவியில் தமிழகத்துக்கு முதல்வராகலாம்...
...
பாவத்துக்கு கஷ்டம் அனுபவிப்பீர்கள்..
புண்ணியத்துக்கு இன்பம் அனுபவிப்பீர்கள்.
...
விடை:
நீங்கள் பிறவி எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால்,
"எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும்."
..
உங்கள் அக்கௌன்ட் -இல் எந்த வினையும் இருக்கக் கூடாது.
அது பாவமோ, புண்ணியமோ...
எதுவும் இருக்கக் கூடாது..
..
இது மிகச் சுலபம் போல் தெரிகிறது தானே?
...
ச்சி... இது சோம்பேரியின் வேலை ஆயிற்றே என்று தோன்றுகிறதா?
...
ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீங்கள் சாலையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பிச்சைக்காரர் உங்களிடம், "சாமி தர்மம் போடுங்க", என்று கேட்கிறார்... என்ன செய்வீர்கள்?
///
பிச்சை போடாவிட்டால், அது பாவக்கணக்கு...
பிச்சை போட்டுவிட்டால், அது புண்ணியக் கணக்கு...
...
இப்போது சொல்லுங்கள் - உங்கள் வினையை பூஜ்ஜியம் ஆக்குவது சுலபமா, கடினமா?
...
முயலுங்கள், நண்பர்களே...
ஓம் நமசிவாய நமஹ...
.
என்ன செய்தால் பிறவியை அறுக்க முடியும்?
.
*** விடாமல் பிராணாயாமம் செய்தால் பிறவியை வென்று விடுவேனா?
.
*** வாசி யோகம் தொடர்ச்சியாக செய்து வந்தால் பிறவியை வென்று விடுவேனா?
.
*** குண்டலினியை சஹஸ்ராரத்தில் ஏற்றி நிறுத்திவிட்டால் பிறவியை வென்று விடுவேனா?
.
.....என்றால், "இல்லை".
...
இவை அனைத்தும் நம் உடலையும் மனதையும் ஆன்மீகத்துக்கு தயார் படுத்தும் நெறிமுறைகள்.
இவற்றையெல்லாம் நித்தம் கடைபிடித்து வருவதால், என்னுடைய உடலும், மனதும், ஆன்மாவும் - ஆன்மீகத்துக்கு பக்குவமடைந்து ரெடி ஆகி விடுகிறது. அவ்வளவே...
...
இந்த பிராணாயாமம், தியானம், வாசி யோகம், குண்டலினி - இவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால் - சித்திகள் செய்ய முடியும்.
...
(சின்ன சின்ன சித்திகள் நிகழும்.)
...
கேள்வி அதுவல்ல.... பிறவியை அறுப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
...
பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.
... சரி.... இந்த நொடி முதல் எந்த வித பாவங்களும் செய்வதில்லை என்று முடிவெடுத்தாயிற்று.
...
புண்ணியங்கள் நிறைய செய்ய வேண்டுமா?
... பாவங்களைக் குறைத்துக் கொண்டு (அல்லது முற்றிலும் செய்யாமல்), புண்ணியங்கள் மட்டும் நிறைய செய்து வந்தால், பிறவி அறுபடுமா?
....
...
பெருமக்களே...!!!
பாவங்கள் செய்தால், எப்படி அதை அனுபவிப்பதற்காக மீண்டும் பிறப்பு எடுப்பீர்களோ, அதே போல் புண்ணியம் செய்தால், அந்த சுகத்தை அனுபவிக்கவும் பிறவி எடுத்து தான் தீருவீர்கள்... நிறைய புண்ணியம் செய்து விட்டு இறந்து போனால், நீங்கள் கூட அடுத்த பிறவியில் தமிழகத்துக்கு முதல்வராகலாம்...
...
பாவத்துக்கு கஷ்டம் அனுபவிப்பீர்கள்..
புண்ணியத்துக்கு இன்பம் அனுபவிப்பீர்கள்.
...
விடை:
நீங்கள் பிறவி எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால்,
"எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும்."
..
உங்கள் அக்கௌன்ட் -இல் எந்த வினையும் இருக்கக் கூடாது.
அது பாவமோ, புண்ணியமோ...
எதுவும் இருக்கக் கூடாது..
..
இது மிகச் சுலபம் போல் தெரிகிறது தானே?
...
ச்சி... இது சோம்பேரியின் வேலை ஆயிற்றே என்று தோன்றுகிறதா?
...
ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீங்கள் சாலையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பிச்சைக்காரர் உங்களிடம், "சாமி தர்மம் போடுங்க", என்று கேட்கிறார்... என்ன செய்வீர்கள்?
///
பிச்சை போடாவிட்டால், அது பாவக்கணக்கு...
பிச்சை போட்டுவிட்டால், அது புண்ணியக் கணக்கு...
...
இப்போது சொல்லுங்கள் - உங்கள் வினையை பூஜ்ஜியம் ஆக்குவது சுலபமா, கடினமா?
...
முயலுங்கள், நண்பர்களே...
ஓம் நமசிவாய நமஹ...

Comments
Post a Comment