Skip to main content
நாம்.இருந்த இடத்திலே செய்யும் வழிப்பாட்டுக்கு அகவழிபாடு என்று பெயர்..அகவழிப்பாட்டில் தெய்வத்திடம் உபாசனை பெறலாம் . 
       இந்த அகவழிப்பாடு என்பது வாசி பயிற்சியில்லாமல் செயல்படும் இதன் மூலம் நமது வாக்கு..மனம் எமது எண்ணம்.உள் காற்று இவைகள் ஒரநிலையில் உள்மணதில் ஒரமைப் படுத்தப்பட்டு  உள் வழிப்பாடு செய்யும் செயலாகும். .அப்போது வாசி ஒடுக்கப்பட்டு...நமது மேலண்ணத்திலிருந்து உச்சிவரை வாசியானது ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கும்.
         இந்த நிலையில் நாம்நாள்தோறும் தீவிர மான அகவழிப்பாடு செய்ய செய்ய  நமது வாசியாது அது ஒடும் நீல பாதை நாளடவில் கொஞ்சம் கொஞ்மாக குறைந்துக் கொண்டே வரும்
         அப்படி வாசி குறைய குறைய உமது உள்மனதில் ஒரு மாபெரும்.செயல்களை செய்யக்கூடிய மனநிலையானது தெளிவுப்படும்..இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் போது சாதகன் எப்போதும்  விழிப்பு ணரவுடன் இருப்பான்  அப்போது சரியான உறககம் இருக்காது மனதில் சோர்வுகள் இருக்காது  மெய்ஞ்ஞானத் தெளிவு ஏற்படும் அப்போது  அவனு ஜீவன் ஆருயிராக மாற்றம் பெறும் ...அந்த ஆருயிர் ஆன்மாவாக மாறும்..அப்போது மனதில் தெய்வீக நிலை  ஏற்ப்படும் ...அந்த நிலையில் தான் இறைவனின் எண்குணங்கள்  நமது மனதால் அறிந்துக் கொள்ளும் ஆற்றல் கிட்டும் ...அப்போது மந்திரங்களின் மறைப்புகள் அனைத்தும் தெளிவு பெறும்  ...இவைகளை பெற மகான் அகஸ்தியர் வழிகாட்டலுடன் அன்னையின் அருளையம் பெற்றுவிட்டால்..அனைத்தும்  கைகூடும் என்பது உறுதியே
     எனவே அகவழிப்பாட்டினை செய்து இறையாற்றலை  பெறுங்கள்...

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.